கோவை மாநகரில் அதிகமாக பரவி வரும் கோவிட் தொற்றினால் பற்பல மக்கள் தொடர்ந்து கோவையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். இதை சமாளிக்க கிரெடாய் அமைப்பின் கோவை மையம் விரை வாக செயல்பட்டு ஆக்சி ஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கை வசதி கொண்ட ஒரு கொரோனா சிகிச்சை மையத்தை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் அமைத் துள்ளது.
ஒவ்வொரு படுக்கைக் கும் இத்தகைய சிகிச்சை மையங்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் குழாய் மூலம் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பபட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். சுமார் ரூ.2 கோடி செலவில் அமைந்துள்ள இந்த சிகிச்சை மையத்தை நிறுவுவதற்கு கிரெடாய் கோவை அமைப்பிற்கு எக்சன் நிறுவனம் மற்றும் மற்றும் பல்வேறு தரப்பி னரும் உதவியுள்ள னர்.
கிரெடாய் கோவை அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ கூறுகையில், கிரெடாய் கோவை அமைப்பானது பற்பல சமூகத் தேவைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. இத்தருணத்தில் மிகவும் தேவையான முழு ஆக்ஸிஜன் வசதி கொண்ட இந்த மையத்தை அமைத்துத் தருவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
தமிழக கிரெடாய் அமைப்பின் செயலர் டி. அபிஷேக் அவர் கள், கல்லூரியில் உள்ள கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் மற்றும் கலையரங்கம் ஆகியவை சிகிச்சை மையத்தின் தேவைக்கேற்ப மாற் றியமைக்கப்பட் டுள்ளது என்றார்.
சுரேந்தர் விட்டல், எஸ்.ஆர். அரவிந்த் குமார், ராஜீவ் ராமசாமி, மற்றும் கல்பேஷ் பாப்னா ஆகியோர் குறுகிய காலத்தில் இந்த சிகிச்சை மையத்தை ரூ.2கோடி செலவில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.