fbpx
Homeபிற செய்திகள்அவிநாசி வட்டம் செம்பியநல்லூர் கிராம மக்கள் 1500 பேருக்கு ஓமியோபதி நோய் எதிர்ப்பு மருந்து

அவிநாசி வட்டம் செம்பியநல்லூர் கிராம மக்கள் 1500 பேருக்கு ஓமியோபதி நோய் எதிர்ப்பு மருந்து

அவிநாசி வட்டம், செம்பியநல்லூர் ஊராட்சி, வெள்ளியம்பாளையம் மகாலட்சுமி நகரில் 1200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, தேசிய மாற்றுமுறை மருத்துவ கவுன்சில் மற்றும் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் சார்பில் ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆர்சனிக் ஆல்பம் 30 சி மருந்து வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. செம்பியநல்லூர் ஊராட்சித்தலைவர் சுதா வேல்முருகன் தலைமை தாங்கினார். தேசிய மாற்று முறை மருத்துவக் கவுன்சில் தேசியத்தலைவர் மருத்துவர் பிலிப்ராஜ் ரவி, செயலாளர் மருத்துவர் ரீனாரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் தேசிய மாற்று முறை மருத்துவ கவுன்சில் தேசியத்தலைவர் மருத்துவர் பிலிப்ராஜ் ரவி பேசுகையில், தேசிய மாற்றுமுறை மருத்துவ கவுன்சில் மற்றும் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் சார்பில் கொரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்தியாவின் ஆயுஸ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆர்சனிக் ஆல்பம் 30 சி. இது, தலைவலி, காய்ச்சல், மூக்கடைப்பு, சுவாச கோளாறு, சுவாசிக்க சிரமம், மூச்சு இரைப்பு, நெஞ்சுவலி, உடல் வலி, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பல விதமான நோய்களை போக்க வல்லது. இந்த ஆர்சனிக் ஆலபம் 30 சி மருந்தினை எடுத்துக் கொண்ட கொரோனா நோய் தொற்று பாதித்தவர்கள் விரைந்து குணம் பெற்றுள்ளனர், என்றார்.

செம்பியநல்லூர் ஊராட்சிமன்ற தலை வர் சுதா வேல்முருகன் பேசுகையில், தங் கள் ஊருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆர்சனிக் ஆல்பம் 30 சி-னை இலவசமாக வழங்கியதற்காக நன்றி தெரி வித்தார்.
அதனைத் தொடர்ந்து மகாலட்சுமி நகரில் 1200க்கும் மேற்பட்ட பொதுமக்க ளுக்கு இலவசமாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆர்சனிக் ஆல்பம் 30 சி மருந் துகள் வழங்கப்பட்டது.

இம்மருத்துவ முகாமிற்கான ஏற்பாடு களை மகாலட்சுமி நகர் வார்டு உறுப்பினர் ரஜினி, தேசிய மாற்று முறை மருத்துவக் கவுன்சில் தேசியத்தலைவர் மருத்துவர் பிலிப்ராஜ் ரவி செயலாளர் மருத்துவர் ரீனாரவி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் ஆரோக்கியராஜ் , மக்கள் தொடர்பு அலுவலர் பிரின்ஸ், மகாகணபதி திருக்கோயில் டிரஸ்ட் நிர்வாகத்தினர் காளிமுத்து, ராமமூர்த்தி, விஷ்ணு, இளையராஜா, ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.-

படிக்க வேண்டும்

spot_img