fbpx
Homeபிற செய்திகள்அமேசான் அறிமுகப்படுத்தும் கொரோனா நிவாரணத் திட்டம்

அமேசான் அறிமுகப்படுத்தும் கொரோனா நிவாரணத் திட்டம்

அமேசான் இந்தியா தனது ஊழியர்கள் மற்றும் முன்களக் குழுக்களின் பாதுகாப்புக்கு வழங்கும் பல்வேறு முனைவுகளுடன், தற் போது கோவிட்-19 நிவாரணத் திட்டத்தையும் (சிஆர்எஸ்) அறி முகப்படுத்தி உள்ளது.


இதன் மூலம் அமேசான் இந்தியா பணியாளர் முகமை மூலம் பணியமர்த்தப்பட்ட முன் களக் குழுக்கள், கூட்டாளிகள் மற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு கோவிட்-19 படித்தொகையையும், மருத்துவச் செலவுகளையும் ஈடு செய்யத் தேவையான நிதி உதவி களையும் வழங்கும்.


கோவிட்-19 படித்தொகையாக ரூ.30,600 ஒவ்வொரு ஊழியருக்கும், வீட்டிலேயே எடுத்துக் கொள்ளும் கோவிட் சிகிச்சை, மருத்துவக் கருவிகள் அல்லது மருந்துவம் தொடர்பான செலவுகளுக்கு அளிக் கப்படும். ஊழியர்களின் கோவிட்-19 தொடர்பான மருத்துவமனைச் செலவுகள் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையைத் தாண்டும் பட்சத்தில், அமேசான் இந்தியா ரூ 1,90,000 வரையிலான காப்பீடு அங்கீகாரம் பெற்ற மருத்துவச் செலவுகளைக் கூடுதலாக ஈடு செய்யும்.

முன்களக் கூட்டாளிகள் உள்ளூர் கட்டுப்பாடுகள் காரண மாக வேலைக்குச் செல்ல முடி யாத நிலையில் அவர்களுக்கு வாழ் வாதாரத் தொகையாக ரூ.7500 வழங்கப்படும். மேலும் தொலை பேசி மற்றும் ஆன்லைன் வழியாக மருத்துவ ஆலோசனைகளையும், தீர்வுகளையும் இக்குழுக்கள் பெறலாம்.

அமேசான் இந்தியா ஆபரே ஷன்ஸ் ஹெச்ஆர் இயக்குனர் ஸ்வாதி ரஸ்டகி கூறுகையில் ‘எங்கள் முன்களக் குழுக்கள் வாடிக்கையாளர் தேவைகளை அவர்களது வீட்டுக்கே சென்று வழங்கி உதவுவதுடன், நாடு முழுவது முள்ள கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் வலைப்பணிக் கூட்டாளிகளுக்குத் தேவையான நிதி மற்றும் மருத்துவ வசதிகளை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என்றார்.


இந்தியாவிலுள்ள தனது ஊழியர்கள், விற்பனையாளர்கள், கூட்டாளிகள் 10 லட்சம் நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலவுகளை ஈடு செய்வதாக அமேசான் இந்தியா சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img