fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சார்பில் ஐடியா ஆய்வகத்தை அமைப்பதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல்...

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சார்பில் ஐடியா ஆய்வகத்தை அமைப்பதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தேர்வு

புதுடெல்லி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐடியா ஆய்வகத்தை நாடு முழுவதும் உள்ள, AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், கல்லூரியின் நிறுவன மேம்பாட்டு கவுன்சில் மூலம் அமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. புதுமையான யோசனைகள், அவற்றின் உருவாக்கம், மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட வைக்க, ஆராய, அதன் பயனை வெளிப்படுத்த மற்றும் சிறந்து விளங்கச் செய்வதே இந்த ஆய்வகத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் இருந்து தகுதி நிறைந்த 204 கல்லூரி கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தி ருந்தன. இந்த விண்ணப்பங்களை தேசிய வழிநடத்தல் குழு பல மதிப்பீடுகள் மூலமாகவும், நேர்காணல்கள் மூலமாகவும் மதிப்பீடு செய்து இறுதியாக 49 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன.
கோவை வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்த ஐடியா ஆய்வகத்தை தனது வளாகத்தில் அமைப்பதற்கான நிதி உதவியைப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐடியா ஆய்வகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவுவதற்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த கிராப்ட் மேன் ஆட்டோமேஷன் என்னும் முன்னணி தொழில்துறை நிறுவனம் முன்வந்துள்ளது.

ஐடியா ஆய்வகம், சுமார் 5000 சதுர அடி பரப்பளவில், புதுவகை ஆய்வுக்கருவிகள், முப்பரிமாண அச்சுக்கருவிகள் மற்றும் யோசனைகளை உருவாக்கம் முதல் செயல்பாடு வரைக்கும் உதவக் கூடிய ஆய்வுக்கு கருவிகளுடன் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமல் லாது அருகாமையில் உள்ள கல்லூரியின் மாணவர்களும் இந்த ஆய்வகத்தை பயன்படுத்தும் வகையில் 24மணி நேரமும் ஆய்வகம் திறந்திருக்கும்.

ஏற்கனவே கல்லூரியில் இருக்கும் கண்டுபிடிப்பு மையத்தின் கூடு தல் வசதியாக இந்த ஆய்வகம் இருக்கும். கல்லூரியின். கண்டுபிடிப்பு மையம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் ஐந்து நட்சத்திர தரக்குறியீடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img