ஈரோடு மாவட்டம் கோபி சரகத்திற்கு உட்பட்ட பனங்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோபி சரக துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையிலான குழு, விவசாயிகளை நேரடியாக சந்தித்து பயிர்க்கடன் பெறுவது தொடர்பாகவும், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தது.
அதனை சரிசெய்வது தொடர்பாகவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கள ஆய்வின் மூலம் பனங்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் மூலம் தொகை ரூ.35 இலட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.



