தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு கடந்த 2 வருடங்களாக செயல் அலுவலர் இல்லாதால் பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி கூடுதல் பொறுப்பாக மாரண்டஅள்ளி பேரூராட்சியை கவனித்து வந்தார்.
நீண்ட நாட்களாக மாரண்ட அள்ளி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில் புதிய செயல் அலுவலராக தென்காசியை சேர்ந்த சங்கர் கணேஷ் மாரண்டஅள்ளி செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலகத்தில் செயல் அலுவலராக சங்கர் கணேஷ் பொறுப்பேற்று கொண்டு தனது பணியை தொடங்கினார்.



