சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவை மிகச்சிறப்புடன் நடைபெற பணியாற்றிய மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் மாநகர காவல் துறை ஆணையர் நஜ்மல்ஹோதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், சேலம் வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.



