கோவையில் பா.ஜ.க வேட்பாளர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கியதை அடுத்து வாக்காளர் களை கவர வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்., 19ல் ஒரே கட்டமாக நடை பெறவிருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த வேட்புமனு பரிசீலனை ஓய்ந்தது. இதனையடுத்து வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பணியை வேட்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 46 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார் சுதாகர்.
இவர் தற்பொழுது வாக்காளர்களை கவரும் வகையில் நூதன முறையில் பொது மக்களிடம் காய்கறி தள்ளுவண்டியை தள்ளி கொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறார்.
இதனால் தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.



