Homeபிற செய்திகள்கோவை பள்ளி மாணவன் இரு கைகளாலும் தலைகீழாக தமிழ் கட்டுரை எழுதி சாதனை

கோவை பள்ளி மாணவன் இரு கைகளாலும் தலைகீழாக தமிழ் கட்டுரை எழுதி சாதனை

கோவை செட்டி வீதி அசோக் நகர் பகுதியை சேர்ந்த ரவிசங்கர், சங்கீதா தம்பதியரின் இளையமகன் பிரித்திவ். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் இவரது அரிய திறமையை கண்ட இவரது பெற்றோர், மாணவன் பிரித்திவுக்கு அளித்த பிரத்யேக பயிற்சியால், தனது வலது, இடது என இரு கைகளாலும், தமிழ் எழுத்துக்களை தலை கீழாக வேகமாக எழுத துவங்கியுள்ளார்.

மாணவன் பிரித்திவின் திறமை குறித்து அறிந்த நோபள் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகுவின் முயற்சியால் மாணவன் பிரித்திவ் நான்கு பக்கங்கள் கொண்ட தமிழ் கட்டுரையை இரண்டு கைகளாலும், தலை கீழாக எழுதி, நோபள் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img