கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டுஎண்.68க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், பணிக்குழு தலைவர் சர்நதிமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் கமலாவதி போஸ், பிரபா ரவீந்திரன், வித்யா, நகர்நல அலுவலர் பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி நகர்நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், முருகன், ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர்.



