கோவையில் தனியார் பள்ளி மாணவரை ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை கணபதி உதயா நகரைச் சேர்ந்தவர் கலாதரன். இவரது 16 வயது மகன் கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவர்கள் அ¬ னவருக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது. அதனை வாங்கிகொண்ட பிளஸ் 1 மாணவர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.
சீருடையை வீட்டில் அணிந்து பார்த்த போது சட்டை பெரியதாக இருந்துள்ளது.
இதனால் சீருடையை தனது தாயாரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக் குமாறு கூறி உள்ளார்.
அவரது தாயாரும் சட்டையை தைத்து கொடுத்தார். அந்த சட்டையை அணிந்து கொண்டு பிளஸ் 1 மாணவர் வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அங்கு வகுப்பறையில் மாணவர் அமர்ந்திருந்தார்.
அப்போது வகுப்புக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சிவராஜ், மாணவரிடம் “எதற்காக சட்டையை இறுக்கமாக அணிந்து உள்ளாய்?” எனக் கேட்டு சரமாரியாக தாக்கியுள் ளார்.
மாணவர் வலிதாங் காமல் அலறி துடித்தார். மாணவரின் சத்தத்தைக் கேட்டு சக ஆசிரியர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.
இயற்பியல் ஆசிரியர் தாக்கியதில் மாணவருக்கு காது, கை, முதுகு உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்துள்ளனர்.
சட்டையை இறுக்கமாக அணிந்ததால் மாணவருக்கு அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



