கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வருபவர் சி.விஷாலினிக்கு, உலக தமிழ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
சிலம்பப் போட்டியில் சிறப்பாக திகழ்ந்து வருவதை பாராட்டி, மும்பையில் கடந்த நவம்பர் 25ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷாலினிக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரம் 15 நிமிடம் இடைவிடாமல் போர் சிலம்பம் சுற்றிய முதல் பெண் கலைஞர் என்ற சாதனை படைத்தார். இதனை உலக சாதனையாக, உலக சாதனையாளர்கள் சாதனை புத்தகம் அமைப்பு அங்கீகரித்தது.



