சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு 2024- 2025-ம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு பயிலும் 17 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் என்.வெங்கடேச பழனிசாமி வரவேற்றார். துணைவேந்தர் டாக்டர் வி.கீதாலட்சுமி, கௌமார மடம் குமரகுரு சுவாமிகள், சக்திமசாலா நிறுவனங்களின் நிறுவனர்கள் டாக்டர் பி.சி. துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான கல்வி கட்டணம் ரூ.5,32,100 கான வரைவோலையை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
கடந்த ஆண்டு 15 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு ரூ. 9,39,000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.