ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோவை, Renovate என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
சமூக முனைப்பில் நடக்கும் இதன் நிகழ்ச்சியை 69வது வார்டு சாய்பாபா காலனி மாநகராட்சி பூங்காவில், சாயிபாபா துவங்கினர்.
பூங்காவை சுத்தப்படுத்துதல், பசுமையாக மாற்றுதல், வண்ண மயமாக்கல், பழுது செய்தல், சுவர்களில் ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தப்படும்.
இது நான்கு கட்டங்களாக நடைபெறும்.
இத்திட்டத்திற்காக PSGIM இல் எம்பிஏ படிக்கும் மாணவி கீர்த்தனா ரூ.20,000 நிதியுதவி வழங்கினார்.
மேலும் நார்த் ஸ்டூடியோ சார்பில் செயற்பாட்டாளர்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.



