தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகரில் உள்ள தற்காலிக ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன், ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் முருகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய மேலாளர் கிருஷ்ணவேணி வரவேற்றார். இக்கூட்டத்தில் பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் 31 தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன