அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவை பேரூரில் உள்ள அருந்ததியர் மடத்தில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பொருளாளர் மாறன் வரவேற்றார்.
தமிழ்நாடு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணை யத்தின் உறுப்பினர் எஸ்.செல்வ குமார் தலைமை வகித்தார். முன்னாள் துணைத் தலைவர் ரவிக்குமார், முன்னாள் தலைவர் சுந்தரம், மூத்த நிர்வாகிகள் நடராஜ், பஞ்சலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தி னராக ஸ்டேட் பேங்க் வங்கி முன்னாள் பொது மேலா ளர் இளங்கோ கணேசன் கலந்து கொண்டார். தொடர்ந்து 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை, நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் வழங்கி கவுரவித்தார். கொரோனா பரவல் எதிரொலியால் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் முகக்கவசம், சானிடைசர் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அன்னூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் மருதாச்சலம், இந்தியன் வங்கி மேலாளர் இருகூர் பழனிச்சாமி, அருந்ததியர் மடத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மடத்தின் மேலாளர் சரண்யா தேவி நன்றி கூறினார்.