அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்றைய தினம் புனரமைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை பார்வையிட்டார்கள்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியும், புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலை வர் அவர்களும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் அவர்களும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப் பினர்களும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சிச் செயலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மிருனாளினி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.