தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் காமுகுல ஒக்கலிகர் (காப்பு) கவுடர் மகா ஜன சங்கம் 75ம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டு தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள 78 கிராமங்களில் உள்ள சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக ஆறுமுகசாமி கலந்துகொண்டு சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் சங்கத்தின் மூலமாக மாணவர்களுக்கு செயல் படுத்தக்கூடிய திட்டங் கள் குறித்தும் சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் உபதலைவர் சிவராம், பொருளாளர் பிச்சைமணி, தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு 75 ஆம் ஆண்டு பவள விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.