கோவை அருகில் வடவள்ளியில் உள்ள கோகுலம் சேவா ஆசிரமத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் எலைட் அரிமா சங்க தலைவர் சசி நாராயணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆசிரமத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்கினார். இந்த விழாவில் கோவை மூத்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா, முன்னாள் தலைவர் ஆலாளசுந்தரம், எம்.கே.ராஜேஷ் மற்றும் ஆசிரமத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



