ஆயுள் காப்பீடானது பாலிசிதாரருக்கு அகால மரணம் ஏற்பட்டால், குடும்பத்தின் நிதி நல்வாழ்வை உறுதி செய்யும் வாக்குறுதியாகும். நேசிப்பவரின் இழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியைப் போக்க இது ஒரு கருவியாகும்.
உரிமைகோரல்கள் தொழில்துறையின் உண்மையின் தருணமாக இருக்கிறது, எனவே ஒருவர் அவர்கள் நம்பும் ஒரு பிராண்டிலிருந்து பாலிசியை வாங்க வேண்டும்.
உரிமை கோரல்கள் தீர்வு விகிதம் மற்றும் ஒரு உரிமை கோரலைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட சராசரி நேரத்தை மதிப்பிடுவது வாடிக்கையாளருக்கு உகந்த ஆயுள் காப்பீட்டாளரின் நல்ல குறிகாட்டியாக இருக்கும். பயனாளிகள், உரிமை கோரல் பணம் விரைவாக பெறப்படுவதை உறுதி செய்கிறபடியால் செயல்பாட்டு நேரமும் கூட மிக முக்கியமானதாக இருக்கிறது
இருப்பினும், பொறுப்பு முற்றிலும் காப்பீட்டு நிறுவனத்திடம் இல்லை. வாங்கும் நேரத்தில் அனைத்துத் தகவல்களையும் உண்மையாக வெளிப்படுத்தும் பொறுப்பை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், இது நியமினிகளுக்கு விரைவான மற்றும் தொந்தரவு இல்லாத உரிமைகோரல் அனுபவத்தை உறுதி செய்கிறது.
விதிமுறைகளின்படி, ஆயுள் காப்பீட்டாளர்கள் காலாண்டு அடிப்படையில் தங்கள் உரிமைகோரல் தீர்வு விகிதங்களை அறிவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, சம்பவம் நேரிட்டால் தனிநபர்கள் அவர்களை சார்ந்தவர்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்கு ஆயுள் காப்பீட்டை வாங்குகிறார்கள்.
குறிப்பிடத்தக்க வகையில், 2024 நிதியாண்டின் ஆரம்ப ஒன்பது மாதங்களில் ஒரு குறிப்பிடத்தக்க 98.6% உரிமைகோரல் தீர்வு விகிதத்துடன், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் , நிலையான உரிமைகோரல் தீர்வு விகித சாதனைப் பதிவைக் கொண்டுள்ளது.