fbpx
Homeபிற செய்திகள்1 லட்சம் புத்தகங்கள், கூட்ட அரங்குடன் நவீன நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்ய இயக்குனர்...

1 லட்சம் புத்தகங்கள், கூட்ட அரங்குடன் நவீன நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்ய இயக்குனர் ஆய்வு

கடலூரில் 1 லட்சம் புத்தகங்கள், கூட்ட அரங்கு வசதிகளுடன் நவீன நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்ய அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுநூலகத்துறை சார்பில் நவீன வசதி களுடன் கூடிய நூலகம் கடலூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பொது நூலக இயக்குனர் சங்கர், நூலகம் அமைப்பதற்காக கடலூர் செம்மண்டலம் பகுதியில் இடம் தேர்வு செய்யும் பணி குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திடவும், இடைநிற்றலின்றி பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து தனக்கென ஒரு வேலைவாய்ப்பை இளைஞர்கள் உருவாக்கிக் கொள்ளும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நல னுக்காகவும், போட்டி தேர்வு எழுதிடும் மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் நவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள் பல்வேறு மாவட்டங்களில் அமைக் கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பொதுநூலகத்துறை சார்பில் மாவட்டமைய நூலகம், கிளை நூலகங்கள், ஊரகப் பகுதிகளில் முழு நேர கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள் என 142 நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2025-26-ம் ஆண்டிற்கான பள்ளி கல்வித்துறை நிதி நிலை அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் 1லட்சம் புத்தக ங்கள் மற்றும் கூட்ட அரங்கு வசதிகளுடன் கூடிய நவீன நூலகம் அமைப்பதற்கு தற்போது இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்) சிவசங்கரநாயகி, மாவட்ட நூலக அலுவலர் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img