கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலை வகித்தார்.
கோரிக்கை மனுக்கள்
இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 45 நபர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி. சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப் பட்டன.
இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 14 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 5 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 4 மனுக் களும், மத்திய மண்டலத்தில் 10 மனுக்களும், பிரதான அலுவலகத் தில் 4 மனுக்களும் ஆகமொத்தம் 45 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சமீபகாலமாக மேயர் கல்பனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஆய்வு பணிகள், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது, மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்து கொடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை விரைவாக எடுத்து வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.