fbpx
Homeபிற செய்திகள்கோவை உடையாம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வகுப்பறைகள் புனரமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை உடையாம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வகுப்பறைகள் புனரமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் உடையாம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பிடம் கட்டுதல் மற்றும் வகுப்பறைகள் புனரமைக்கும் பணி நடைபெற்ற வருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதா சேரலாதன், அம்சவேணி மணிகண்டன், உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கல்யாணசுந்தரம், சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img