சிதம்பரம் அம்பலத்தாடி மடம் தெருவில் உள்ள அல்ஜன்னா மகளிர் அரபிக் கல்லூரி 3-ம் அண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் ஜைனுல் ஆபிதீன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் யாசிர் அரபாத், அஷ்ரஃப் அலி ரப்பானி, சேக் ஹசன், பேராசிரியர்கள் வஹிதா பேகம், ஜஸ்ரா மற்றும் என்டிஎப் நிர்வாகிகள் முஹம்மது அம்மார், தாஜீதீன், ஷேக் முஹம்மது, இஸ்மாயில், மூசா, நகர்மன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.