fbpx
Homeபிற செய்திகள்நீரிழிவு உதவி எண்ணில் தடங்கலற்ற சேவையை வழங்கி காவேரி மருத்துவமனை சாதனை

நீரிழிவு உதவி எண்ணில் தடங்கலற்ற சேவையை வழங்கி காவேரி மருத்துவமனை சாதனை

சென்னையில் காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண் (88802 88802) ஏப்ரல் 21, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து 1500 நாட்களுக்கு தடங்கலற்ற நேர்த் தியான சேவையை வழங்கியுள்ளது.


இந்த முன்முயற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு ஒரு முக்கிய உயிர்நாடியாக மாறியுள்ளது. நீரிழிவு சிகிச்சைக்கான உதவி எண் சேவையின் தாக்கத்தை அங்கீகரித்து கொண்டாடும் இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.


இம்மருத்துவமனையின் தலைமைத்துவ மற்றும் சிகிச்சை பராமரிப்பு குழுவினருடன் இணைந்து, இந்த உதவி எண்ணின் தாக்கத்தை பாராட்டிய அமைச்சர் நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை சேவைகளில் தொடர்ச்சியான புத்தாக்க உத்திகளை காவேரி மருத்துவமனை பயன்படுத்தி வருவதை குறிப்பிட்டு இதனை மேலும் பரவலாக்க வேண்டுமென ஊக்குவித்தார்.


இந்த உதவி எண்ணானது நீரிழிவு கல்வியாளர்கள், மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் தரவு-கண்காணிப்பு வல்லுநர்கள் அடங்கிய ஒரு பிரத்யேக சிறப்பு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.


2024-ஆம் ஆண்டில் மட்டும், காவேரி மருத்துவமனையின் நீரிழிவு உதவி எண் 12,541 அழைப்புகளைக் கையாண்டுள்ளது. இது 2021-ஆம் ஆண்டில் பெறப்பட்ட 1,223 அழைப்புகளை விட பன்மடங்கு அதிகமாகும். கிடைக்கப்பெறும் அழைப்புகள் அதிகரித்திருப்பது, நீரிழிவு சிகிச்சையில் இந்த உதவி எண்ணின் முக்கியப் பங்கை பிரதிபலிக்கிறது.


இது குறித்து நீரிழிவு சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் பரணீதரன் கூறுகையில், “நீரிழிவு ஒரு கால அட்டவணையை பின்பற்றுவதில்லை. அதைப்போலவே அதற்கான சிகிச்சைக்கும் கால அட்டவணை என்ற வரம்பு இருக்கக்கூடாது” என்றார்.


தொடர்ந்து, குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “காவேரியில், நாங்கள் சுகாதார சேவையை தொடர்ச்சியானதாகவும், கனிவானதாகவும், எளிதில் அணுகிப் பெறக்கூடியதாகவும் மாற்ற பாடுபடுகிறோம்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img