கேம்போர்டு இன்டர் நேஷனல் பள்ளிக்கு லண்டனில் நடந்த குளோபல் லீடர்ஸ் உச்சி மாநாட்டில் உயரிய விருது வழங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 26 அன்று லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடா ளுமன்றத்தில் குளோபல் லீடர்ஸ் உச்சி மாநாடு மற்றும் 2025க்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கேம்போர்டு இன்டர்நேஷனல் பள் ளிக்கு “இந்தியாவின் சிறந்த பள்ளிக்கான விருது” வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் உறுப்பினர் லார்ட் ப்ரென்னன் கே.சி பள்ளியின் மாணவர் மேம்பாடு மற்றும் கற்றல் பற்றிய அதன் பார்வையை அங்கீகரித்து வழங்கினார்.
இந்நிகழ்வில் பாட சாலையைப் பிரதிநிதித் துவப்படுத்திய தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் இந்நிறுவனத்தின் சார்பில் விருதினைப் பெற்றுக் கொண்டு கௌரவிக்கப்பட் டனர்.
அவர்களின் தலைமையும் அர்ப்பணிப்பும் இந்தியாவின் கல்வித் துறையில் கேம்போர்டு இன் டர் நேஷனல் பள்ளியை நம்பகமான பெயராக உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
இந்த உலகளாவிய அங்கீகாரம் கேம்போர்டு சர்வதேச பள்ளியின் நோக் கத்தை மீண்டும் உறு திப்படுத்துகிறது.



