கடலூர் அருகே அருகே திருச்சோபுரத்தில் ரூ.81 கோடி யில் அருவாமூக்கு திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் ஆண்டுதோறும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ள காலங்களில் பரவனாற்றில் மழைநீரும், நெய்வேலி சுரங்க நீரும் கலந்து ஓடி வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் உள்ள 24 கிராமங்களை சேர்ந்த விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து வருகின்றன.
இது தவிர அப்பகுதி மக்களும், கால்நடைகளும் பலியாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் கடலூர் அருகே திருச்சோபுரத்தில் கீழ்பரவானற்றில், அருவா மூக்கு வடிவில் இணையும் இடத்தில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து ஒரு புதிய கால் வாய் வெட்டி 1.60 கி.மீ. தொலைவில் உள்ள கடலில் எளிதில் வெள்ள நீரை வடிய வைக்கும் அருவாமூக்கு என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து இப்ப ணியை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத் ததும். இந்த அருவா மூக்கு திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று திருச்சோபுரத்தில் நடந்தது.
இதற்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி,பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.
இந்த பணி நிறைவடையும் பட்சத்தில் பர வனாற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் எளிதில் வடியவைக்கப்ப டுவதோடு, அதை சுற்றியுள்ள சுமார் 15 ஆயிரத்து 600 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டு, சுற்றியுள்ள 24 கிராமங்களின் மக்கள் மற்றும் கால்நடைகள் பாதுகாக்கப்படுவதோடு, இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம் படும்.கடலூர் மாவட்டத்தில் 58 கி.மீ. நீளமுள்ள பரவனாறு விருத்தாசலம் வட்டம் சேமக் கோட்டையில் தொடங்கி அருவாமூக்கு வழியாக சென்று கடலூர் பழைய துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது.
இதனால் கரையோர பகுதிகளில் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பரவனாற்றின் மூலம் வெளியேறும் அதிக படியான 42 ஆயிரத்து 800 கனஅடி வெள்ள நீரில் ஒரு பகுதியாக 21 ஆயிரத்து 600 கனஅடி வெள்ள நீரை விரை வாக் கடலில் வடியவைக்கும் வகையில் அருவாமூக்கு திட் டம் செயல்படுத்தப்படுகிறது. என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து 44 குடும்பங்களும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்த அந்த மாற்றுமனைக்கான ஆணையும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் திருத்தி அமைக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கொள்கையின்படி அந்த மாற்றுமனையில் வீடு கட்டிக்கொள்வதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சத்து 35 ஆயிரம் வீதம் 39 குடும்பங்க ளுக்கு ரூ.9.87 கோடி மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) ருத்ரைய்யா, கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.