கோவை மாவட்டம் கிணத்துக்கடவில், பிரதான சாலை 54-55 எண் கட்டிடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று (ஜூன் 10) வங்கியின் பொது மேலாளர் கே.வேலாயுதம் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்வில் வங்கியின் பிராந்திய அலுவலக முதுநிலை மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாளர் ஆர்.ஸ்ரீராம் மற்றும் வங்கி அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.



