கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் மணீஷ் (45). இவரது மகள் ஜான்வி (9). புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மதியம் மணீஷ் தனது மகள் ஜான்வியுடன் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர்கள் தேர்வீதி அருகே சென்ற போது, சாலையில் ஒரு மணி பர்சு கிடந்தது. இதனைக் கண்டெடுத்த ஜான்வி அதனை திறந்து பார்த்தபோது, உள்ளே 9,500 ரூபாய், ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்டு, லைசென்ஸ் ஆகியவை இருந்தன.
உடனே ஜான்வி தனது தந்தையுடன் கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று கீழே கண்டெடுத்த பணத்தை இன்ஸ்பெக்டர் சங்கரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார், மணி பர்சில் இருந்த ஆதார் அட்டையில் உள்ள முக வரியை வைத்து மணி பர்சை தவற விட்ட நபரை கண்டு அறிந்தனர். அவர் பாப்பநாயக்கன் புதூரை சேர்ந்த ஐ.டி ஊழியர் ஹரீஸ் (33) என்பது தெரியவந்தது. போலீ சார் நேற்று அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு மாணவி மணிபர்சை அவரிடம் ஒப்படைத்தார். மாணவியின் இந்த செயலை பாராட்டி ஜான்விக்கு பொன்னாடை போர்த்தி இன்ஸ்பெக்டர் சங்கர் வாழ்த்து தெரிவித் தார்.



