வி.எஸ் மருத்துவ அறக் கட்டளையின் புற்று நோயை வென்றவர்களுக்கான கொண்டாட்டம் நடந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட வென்றவர்களும், அவர்களின் குடும்பத் தார்களும் கலந்து கொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக முருகப்பா குழு மத்தின் முன்னாள் தலைவர் எம். எம். முருகப்பன், ராம் ராஜ் காட்டன் நிறுவனர் தலைவர் கே.ஆர். நாகரா ஜன், திரைப்பட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் மேடைப்பேச்சாளர் மோகன சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அறக்கட்டளையின் தன்னலமற்ற சேவைப் பயணத்தில் துணை நின்றதற்காக நாகு சிதம்பரம் மற்றும் கீதா நாகு, விஎன்சிடி குளோபல் திருப்பதி மற்றும் கண்ணகி திருப்பதி, எமரால்டு டயர்ஸ் ரவி சுந்தரேசன், ஐபிபி, சென்னை ரோட்டரி சங்கம் ஆகியோருக்கு ஹார்ட் ஆப் கோல்ட் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
வலிமைத் தூண் விருதுகள் பெரிதும் பேசப்ப டாத ஹீரோக்களான நோயாளிகளின் உதவி யாளர்கள் மற்றும் பராம ரிப்பாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பேராசி ரியர் டாக்டர் எஸ். சுப்ர மணியன் கூறியதாவது:
புற்றுநோய் உடலை மட்டும் பாதிப்பதில்லை, அது ஆன்மாவையும் பாரமாக்குகிறது. இங்கு உயிர் பிழைத்தவர்கள் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர். அதா வது அன்புடனும், கண்ணியத்துடனும் உரிய பராமரிப்பு வழங்கப்பட் டால் நோய் குணமாகும். இதுதான் விஎஸ் மருத்துவ அறக்கட்ட ளையின் தாரக மந்திரம்.
இவ்வாறு அவர் கூறினார்.