fbpx
Homeபிற செய்திகள்வேலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வெற்றிக்கான வழிமுறைகள் கருத்தரங்கம்

வேலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வெற்றிக்கான வழிமுறைகள் கருத்தரங்கம்

வேலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வெற்றிக்கான சவால்கள் மற்றும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் இணைந்து வேலூர் அண்ணா அரங்கில் நடத்தியது.
இக்கருத்தரங்கத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களை சேர்ந்த அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

இதில் வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசு கையில், “வி.ஐ.டி பல் கலைக்கழகத்தில் 44,000 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், அவர்களில் 4,000 பேர் ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டுள்ளனர். இவர் களுக்கு மாதம் ரூ.35,000 ஆய்வு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் “அனைவருக்கும் உயர் கல்வி” திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 10,000 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது” என் றார்.
வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி பேசுகையில், “மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த அரசு முழுமையான ஒத்துழைப்பு தரும். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கி, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்“ என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், வி.ஐ.டி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன், பேராசிரியர் கள் மீனாட்சி, கோவர் தன், மாவட்ட கல்வி அலுவலர்கள் தயா ளன், சத்திய பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img