கோவை கொடிசியாவில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் கோவை குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் தங்க தொழில் சார்ந்த பூங்கா அமைப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது. உடன் கலெக்டர் பவன் குமார், எம்.எஸ்.எம்.இ துறை முதன்மை செயலர் அதுல் ஆனந்த், ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்மல்ராஜ், கார்த்திக், பொது மேலாளர் தனலிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) உள்ளிட்டோர் உள்ளனர்.



