தேனியில் 10,344 விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேனி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான நான்காவது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.
இதனை நேற்று (6ம் தேதி) தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பங்கேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான 14 வயதுக்கு பட்ட மாணவ மாணவியர்களுக்கான 4-வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, கோகோ, கைப்பந்து, கூடைப்பந்து, எறிபந்து, பூப்பந்து, மேசைப்பந்து, இறகு பந்து, டென்னிஸ் உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் பள்ளி கல்வி துறையின் 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களின் 38 மாவட்ட அணிகளும் இர ண்டு தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி அணிகளும் கலந்து கொள்கின்றன.
இதில் 1172 மாணவர்களும் 5172 மாணவிகளும் மொத்தம் 10 ஆயிரத்து 344 பேர் கலந்து கொள்கிறார்கள்.இந்தப் போட்டியின் தொடக்கத்தினை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீ வனா பங்கேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், தேனி நகர மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன், துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வம், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன் (கவுன்சிலர், விளையாட்டு துறை அலுவலர்கள், பள் ளிக்கல்வித்துறை அலு வலர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.



