மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முகாம் அலுவலகத்திலும் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் மாநகர திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஷ், ஆ.செந்தில்குமார் பகுதி செயலாளர்கள் துணைமேயர் வெ.செல்வராஜ், அக்னி சந்துரு, பொ.ராமச்சந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



