தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக மூனாமைல் திரு.வி.க நகரில் மழைநீரில் இருக்கும் மக்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் இப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு 800 பேருக்கு போர்வை, சாரம், நைட்டி, பாவாடை, மற்றும் அரிசி பருப்பு பலசரக்கு சாமான்கள் ஆகியவை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் அமைப்பாளர் மகிழ்ஜான் சந்தோஷ், மாநகர அணி பிரதி ஐயப்பன், வட்டச் செயலாளர் செல்வராஜ் , தொழிலாளர் நல அணிஅமைப்பாளர் முருகஇசக்கி . மகளிர் அணி செயலாளர் சாந்தி,பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



