உலகத் தமிழர் காப்புக் கூட்டியக்கம், ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி (விஎம்சி) மற்றும் கோவை சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் மற்றும் தமிழ்க் கல்லூரி ஆகியவை இணைந்து வேளாளர் கல்லூரியில் மகளிர் எழுச்சித் தமிழ் மாநாட்டை நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தின.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர அடிகளார், தென்சேரிமலை முத்து சிவராமசாமி அடிகளார், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், முன்னாள் துணைவேந்தர்,
உலகத் தமிழர் காப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் டி.சி.சுப்ரமணியம், வேளாளர் கல்லூரி செயலர் எஸ்.டி சந்திரசேகர், தலைவர் சி.ஜெயக்குமார்,
பொருளாளர் பி.கே.பி.அருண், அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவை தலைவர் எஸ்.துரைசாமி, ஈரோடு பார்மசி கல்லூரி செயலர் நடராசு, தமிழ் காப்பு கூட்டியக்கம் தலைவர் அப்பாவு, வடலூர் தலைமை சுத்த சன்மார்க்க சங்க மாநில தலைவர் அருள் நாக லிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ் மொழியை மேலும் வளர்க்கவும், தங்கள் குழந்தைகளை தமிழில் படிக்க அனுமதிக்கவும், தங்கள் குழந்தைகளுக்கு தூய தமிழ் வார்த்தைகளால் பெயரிடவும் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
ஆய்வாளர்கள், அறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பேச்சாளர்கள் எனப் பலர் தமிழ்மொழி, பண்பாட்டைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினர்.



