Homeபிற செய்திகள்அதிநவீன மோட்டார் பொருத்திய கழிவு நீர் உறுஞ்சும் வாகனங்களை துவக்கி வைத்த அமைச்சர்கள்

அதிநவீன மோட்டார் பொருத்திய கழிவு நீர் உறுஞ்சும் வாகனங்களை துவக்கி வைத்த அமைச்சர்கள்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.2.25 கோடி மதிப்பீட்டிலான 5 அதிநவீன மோட்டார் பொருத்திய கழிவு நீர் உறுஞ்சும் வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

உடன் நகராட்சி நிருவாக இயக்குநர் சிவராசு, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, மண்டலத்தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img