தருமபுரி விவேகானந்தா காது கேளாதோர் பள்ளியில் சஷம் அமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா மாநாடு நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருடன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சஷம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. தகடூர் தமிழன், மாவட்ட செயலாளர் சி.முனியப்பன், மாவட்ட தலைவர் ஜெ.ராஜா, மாவட்ட இனை செயலாளர் இளங்கோ, மாநில இணை செயலாளர் சுரேஷ், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஸ்வபாரதி பள்ளி
மேலும் விஸ்வபாரதி பள்ளி தாளாளர் அரிமா ரவி, சஷம் மாநில நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், ஸ்ரீநிவாச ராமானுஜம், சமூகத்தின் நண்பர்கள் குழு சந்துரு மற்றும் சக்ஷம் நிர்வாகிகள் , விவேகானந்தர். காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி நிர்வாகி அரிமா விவேகானந்தன்.
ரோட்டரி குமார் மற்றும் ஆசிரியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பேனா நோட்டு புத்தகம் வழங்கி வாழ்த்தினார்.



