கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருபாலர் பயிலும் மாநகராட்சி மாதிரி பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் நந்தகுமார், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் சேகர், மாவட்ட கல்வி அலுவலர் பூபதி, மாநகராட்சி கல்வி அலுவலர் ரங்கநாதன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



