கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் செல்வபுரம் சேத்துமா வாய்க்கால் தூர்வாரும் பணியினை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் ஏஞ்சலின், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



