கோவை மாவட்ட மதுக்கரை வட்டாரம் சீரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களுடன் செய்தியாளர் பயணம் மேற்கொண்டபோது, கூட்டு பண்ணய திட்டத்தின் கீழ் சீரபாளையம் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் உழவு இயந்திரங்களை வழங்கினார்.
இவ்ஆய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குநர் சித்ராதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, துணை இயக்குநர்கள் ஷபி அகமது, பெருமாள்சாமி, கிருஷ்ணவேணி, உதவி இயக்குநர் புனிதா, சீரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், விவசாயிகள் கலந்துகொண்டனர்.



