அம்பேத்காரின் பிறந்த தினமான சமத்துவ தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சி தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். அருகில் நகராட்சித் தலைவர் ஷியாமளா நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் உள்ளனர்.



