மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கோவை மாவட்டத்தில் வருகின்ற 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) சரண்யா, இணை இயக்குநர்(மருத்துவம்) சந்திரா, துணை இயக்குநர்(சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) அருணா, மற்றும் பலர் உள்ளனர்.



