முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், அசோக் லேலாண்ட் நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கலனை திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ்(ஓசூர்), ராமசந்திரன்,(தளி) மதியழகன்(பர்கூர்) உட்பட பலர் உள்ளனர்.



