fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் எமர்ஜென்சியை எதிர்த்து சிறை சென்றவர்கள் 50-ஆவது ஆண்டு கூட்டம்

சிதம்பரத்தில் எமர்ஜென்சியை எதிர்த்து சிறை சென்றவர்கள் 50-ஆவது ஆண்டு கூட்டம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்த்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்களின் 50-ஆவது ஆண்டு கூட்டம் சிதம்பரம் கனகசபை நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


கூட்டத்தில் தென்னிந்திய நெருக்கடி நிலைக்கான தன்னார்வலர்கள், சிறை சென்றவர்கள் சங்கத் தலைவர் அசோக்குமார் யாதவ் (தெலங்கானா), துணைத் தலைவர் மோகன்(கேரளம்), லயன் பாபு(தமிழகம்), தமிழகத் தலைவர் எம்.கந்தகுமார், துணைத் தலைவர் மோத்திலால், பொருளாளர் தங்கவேல், ஆந்திர மாநிலத் தலைவர் கிருஷ்ணாராமச்சந்திரன், ரமேஷ், புதுவை மாநிலத் தலைவர் தாமோதரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் லயன் பாபு பேசியதாவது:1975 ஜூன் 25-ஆம் தேதி மிசா சட்டத்தை அமல்படுத்திய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்து சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் சிறை சென்று ஜனநாயகத்தை பாதுகாத்தனர். இவர்களில் 30 சதவீதம் பேர் தான் தற்போது உயிரோடு உள்ளனர்.


50-ஆவது வருட எமர்ஜென்சி நினைவு தினத்தில் எங்களை 2-ஆவது சுதந்திர போராட்ட வீரர்கள் என அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும், எங்களை 2-ஆவது சுதந்திர போராட்ட வீரர்கள் என மத்திய அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

சிறப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். எமர்ஜென்சி ஆட்சிக்காலம் குறித்த சுதந்திர போராட்ட வர லாற்றை பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்றார்.


கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் எஸ்.வி.ஸ்ரீதரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் பாலுவிக்னேஸ்வரன், விசுவஹிந்து பரிஷத் அமைப்பு மாவட்டச் செயலர் ஜோதி குருவாயூரப்பன்,பாஜக நிர்வாகி ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img