தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், மழைக்காலங்களில் காவேரியில் கலக்கும் உபரி நீரை, ஒகேனக்கல்லில் இருந்து பென்னாகரம் மடம் ஏரிக்கு குழாய் பதித்து கொண்டு வரவேண்டும் என்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கேடஷ்வரன் சட்டமன்றத்தில் பேசினார்.
அவர் சட்டமன்றத்தில் பேசியதன் சுருக்கம்:
1989-ம் ஆண்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்து பல்வேறு பதவிகளை வகித்து வந்தேன். தற்போது சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய மருத்துவர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரியில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்து, முதற்கட்டமாக நிதிஒதுக்கீடு செய்த முதல்வர், தொழில்துறை அமைச்சர், நிதித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி.
தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் விரைவாகக் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் மற்றும் நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருக்கும் நன்றி.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியில் புதிய மின்னணு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி.
தருமபுரியை மாநகராட் சியாகத் தரம் உயர்த்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்து எல்லா வாழ்விடங்களுக்கும், உலகத்தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
சாலை போக்குவரத்துக்கு மேலும் கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும். தமிழகத்தில் சாலைகளும், பாலங்களும் தொடர்ந்து தரம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிக் கட்டிடங்கள், அனைத்து துறை அரசு அலுவலகங்களுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்கும், அவற் றை பராமரிப்பதற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
11 கிலோ மீட்டர் தூரம்
முன்னாள் முதல்வர் கலைஞர் துவக்கி வைத்து, ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து, அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர், பலமுறை நேரில் ஆய்வு செய்தார்.
அவருக்கு அந்த திட்டம் பற்றி நன்கு தெரியும். அந்த அடிப்படையில், மழைக் காலங்களில் காவேரியில் இருந்து கடலில் கலக்கும் உபரிநீரை, ஒகேனக்கல்லில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரம் உள்ள பெண்ணாகரம் மடம் ஏரிக்கு, குழாய் அமைத்து கண்டையன் குட்டை என்கின்ற ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தால், தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி களுக்கு கொண்டு செல்லலாம். தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் இத்திட் டத்தை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வேளாண்மைக்கென்று தனி யாக பட்ஜெட் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இந்த ஆண்டு தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு, விவசாயத் துறைக்கு வழங்கும் அனைத்து மானியங்களையும் நிறு த்தி வைத்து, அந்த நிதியைக் கொண்டு இந்ததிட்டம் மட்டும் நிறைவேற்றினால், விவசாயிகளுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
பெரிய ஒன்றியமான நல்லம்பள்ளியைப் பிரித்து இண் டூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கிட வேண்டும்.
இண்டூரைச் சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் பயன்பெறும்.
நல்லாம்பள்ளியில் செயல்படும் மருத்துவமனையை அரசு வட்ட தலைமை மருத்துவமனையாகவும், தொப்பூர், ஜருகுவில் உள்ள மருத்துவமனைகளையும் தரம் உயர்த்திட வேண்டும்.
தருமபுரி, நல்லம்பள்ளியில் பல ஆண்டுகளாக மூடி இருக்கும் அக்ரோ சொசைட்டியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண் டுகளாக குடியிருந்து வரும் மக் களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
மேம்பாலம் தேவை
தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, பழைய தருமபுரி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். தருமபுரியில் புதிய அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும்.
MGNREGS திட்டத்தில் பணியாளர்களை, விவசாயிகள் பயன்பெறும் வகையில், கேரள, ஆந்திர மாநிலங்களில் பயன் படுத்துவதைப் போல், தமிழகத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசும்போது, அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம் என்று. அதனடிப்படையில், MGNREGS பணியாளர்களை அழைத்து வந்து அனைத்து துவக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணி மற்றும் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.
சாமிசெட்டிப் பட்டியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைத் துத் தர வேண்டும். நல்லம்பள்ளியில் 608 புதிய குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்ட ஒப்பந்தப் பணிகள் முடிந்து இன்னும் கட்டடப் பணிகள் ஆரம்பிக்கப் படவில்லை.
இத னை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் புற்று நோய் துறை புதிதாக அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓசூரில் இருக்கும் வீட்டு வசதிவாரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தை தருமபுரி மாவட் டத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் ஊரக வளர்ச்சித் துறையும், பொதுப் பணித் து¬ றயும் இணைந்து தண்ணீர் வசதி யுடன் பராமரிப்பு செய்து தரப்பட வேண்டும். தருமபுரி அதியமான் கோட்டை அருள்மிகு காலபைரவர் திருக் கோயிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி நகரப் பகுதி வெண்ணாம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஷ்வரன் பேசினார்.



