கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோட்டில் அமைந்துள்ள தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசானின் திருவுருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் அலர்மேல்மங்கை மரியாதை செலுத்தினார்.
உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், கிள்ளியூர் வட்டாட்சியர் திருவாழி, அதங்கோட்டாசானார் அறக்கட்டளை சார்பாக, தலைவர் கோவிந்தநாதன், புலவர் சுந்தர்ராஜன் உட்பட பலர் உள்ளனர்.



