சமீப காலத்தில் புற்றுநோய் வேகமாக அதிகரித்துள்ளதால், புற்றுநோய் சிகிச் சையில் தொடர்ந்து பல மருத்துவ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கோவிட்-19 காலங்களில், புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க, மருத்துவர்கள் ‘கீமோ போர்ட்’ -ஐ பரிந் துரை செய்கிறார்கள்.
‘கீமோ தெரபி’க்கு உட்படும் புற்று நோய் நோயாளிகள், குறிப்பிட்ட காலத் தில் பல தடவை சிரைவழியாக மருந்து உட்செலுத்துதலைப் பெறவேண்டி இருக் கும்.
‘கீமோ போர்ட்’ என்பது தோலின் கீழ் பொருத்தப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும், இது உடலுக்கு கீமோதெரபி மருந்துகளை வழங்க மார்பில் உள்ள சிரையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த போர்ட் இல்லாவிட்டால், கீமோதெரபியை மேற் கொள்ளும் ஒவ்வொரு முறையும், புதியதாக சிரைவழியாக (IV) ஊசியை செலுத்த வேண்டும். இது நோயாளிக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், IV-ஐ பயன்படுத்தப்படும்போது, நோயாளிகளின் கை அல்லது கையைச் சுற்றியுள்ள திசுக்களில் மருந்துகளின் கசிவு (மிகையான) அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ‘கீமோ போர்ட்கள்’ பல மடங்கு மிகவும் பயனுள் ளதாக இருக்கும்.
கோவை ஜிகேஎன்எம் (GKNM) மருத்துவமனையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் பி.அருள் ராஜ் கூறியதாவது:
நீண்ட கால ‘கீமோ தெரபி’ சிகிச்சை பெறும் நோயா ளிகளுக்கு கீமோ போர்ட்கள்’ ஒரு சிறந்த தேர்வாக இருக் கும்.
இந்த போர்ட்கள் ‘கீமோ மருந்துகளை எளிதாக செலுத்துவதற்கு துணைபு ரிகின்றன. ஏனெனில் இது சிரைகளை எளிதாக அணுக அனுமதிக்கிறது. ஒவ்வொரு முறையும் பல ஊசி குத்துதல் களைச் செய்வதால் நோயாளிக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கிறது. நோயா ளிகளின் பாதுகாப்பையும் வசதியையும் எல்லா நேரங்களிலும் உறுதிப்படுத்த மருத் துவர்கள் இப்போது அதிகளவில் கீமோ போர்ட்களை பரிந்துரைக்கின்றனர்.
சில நோயாளிகளின் சிரைகளை அணு குவதற்கு மிகவும் கடினமாக உள்ளதால், சில ‘கீமோதெரபி’ மருந்துகளை போர்ட் மூலம் மட்டுமே கொடுக்க முடியும். இது குறிப்பிட்ட மருத்துவத் தேவைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு, சிகிச்சைய ளிப்பதற்கான நம்பகமான விருப்பமாக போர்ட்-ஐ ஆக்குகிறது.
சிகிச்சையின் போது, பொருத்தப்பட்ட ‘கீமோ போர்ட்’ கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை உடலிலேயே இருக்கும். இது ஒவ்வொரு கீமோ அமர்விலும் பொருத்தமான நரம்பைக் கண்டறிய வேண்டிய தேவையை இது நீக்குகிறது.
மற்ற கடுமையான, சிரை அணுகல் சாதனங்களுடன் ஒப்பிடும்போது, கீமோ போர்ட்களுக்கு நான்கு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே கழுவுதல் (ஃப்ளஷிங்) மற்றும் பராமரிப்பு தேவைப்படுகிறது. இது நோயாளியின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துவதைத் தவிர்க்க உதவுகிறது என்றார்.



