நீலகிரி மாவட்டம் உதகை தமிழக அரசினர் விருந்தினர் மாளிகையில் கூட்டுறவுத்துறை சார்பில் கடநாடு ஊராட்சிக்குட்பட்ட காவிலோரை, பட்டக்கொரை கிராமங்களுக்கு நடமாடும் நியாயவிலைக்கடையினை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன் உட்பட பலர் உள்ளனர்.



