நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம், நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு- மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு வழங்கியவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவாய்த்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மேட்டூர் உதவி ஆட்சியர் (பொ) வேடியப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) செல்வம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



